திண்டுக்கல் மேற்கு மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நிலப் பதிவுகள் துறை ஆவண காப்பகத்தில் நில அளவை பிரிவில் உள்ள சர்வேயர் பாக்கியராஜ் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கும் பொழுது கையும் கழுவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பிடித்துள்ளனர். மேலும், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் ஆர்.எம் காலனி பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் தனிபட்டா வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
இது தொடர்பாக மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட நிலப் பதிவுகள் துறை ஆவண காப்பகத்தில் பணிபுரியும் நில அளவை பிரிவில் உள்ள சர்வேயர் பாக்கியராஜ் சந்தித்துள்ளார்.
இதனையடுத்து தனிபட்டாவிற்காக பாக்கியராஜ் அவரது தனிப்பட்ட உதவியாளர் சதீஷ் மூலமாக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக பின் கடைசியாக ரூ.15 ஆயிரம் இறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து கணேஷ் குமார் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் லட்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் லட்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் ரசாயனம் கலந்த பணத்தினை கணேஷ் குமாரிடம் கொடுத்து சர்வேயர் பாக்கியராஜ் உதவியாளர் சதீஷ் (தனிப்பட்ட) இடம் கொடுக்கும்படி தெரிவித்துள்ளனர்.
இதன் படி கணேஷ்குமார் பணத்தை சர்வேயர் பாக்கியராஜ் உதவியாளர் (தனிப்பட்ட) சதீஷ் இடம் கொடுக்கும் பொழுது அவரை கையும் கழுவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை தொடர்ந்து பாக்கியராஜ்-யை பிடித்துள்ளனர். மேலும், நில அளவை அலுவலகத்தை முழுமையாக சோதனை செய்து சர்வேயர் பாக்கியராஜ் மற்றும் உதவியாளர் (தனிப்பட்ட) சதீஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.