தமிழகம்

கணவனின் சடலம் முன்பு.. கள்ளக்காதலனுடன் உல்லாசம் : காரில் ஊர் சுற்றிய மனைவி!

கண்ணை மறைத்த கள்ளக்காதலால் கணவனை கொன்று மனைவி செய்த அட்டூழிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் கதிரம்மா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வெங்கடரமணா என்பவருடன் 20 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்தது

இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, ஒரே வீட்டுக்குள் பேசாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்த சமயத்தில் அருகில் வசித்து வந்த வேணு என்பவருடன் கதிரம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது மெல்ல மெல்ல கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

இதை அறிந்த ரமணா, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாத கதிரம்மா, வேணுவடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

ஒரு நாள் இரவு வீட்டுக்கு வந்த ரமணா, சாப்பிட எதுவும் செய்யாமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியிடம் சண்டை போட்டார். செல்போனை வாங்கி பார்த்த போது, வேணுவிடம் பேசியது தெரியவந்தது. இதனால் கதிரம்மாவை அடித்துள்ளார்.

இதை கதிரம்மா தனது கள்ளக்காதலன் வேணுவிடம் கூற, கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தார். அதன் படி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரமணா அயர்ந்து தூங்கினார்.

அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த வேணு, கதிரம்மா இருவரும் கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக வேணுவின் காருக்குள் கணவரின் சடலத்தை ஏற்றினார்.

சடலத்தை வீசி எரித்துவிடலாம் என திட்டம் போட்டு ஊர் ஊராக சுற்றினர். ஆனால் சரியான இடம் கிடைக்காததால் 2 நாட்களாக காரில் ஊர் ஊராக சுற்றியே வந்தனர். இடம் கிடைக்காததால் நடுக்காட்டுக்குள் காரை நிறுத்திவிட்டு, இருவரும் வீட்டுக்கு திரும்பி எப்போதும் போல தங்களது வேலைகளை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் காட்டுப்பகுதிக்குள் ரோந்து சென்ற போலீசார், கார் தனியாக நிற்பதை கவனித்து, உடனே காரை திறந்து பார்த்துள்ளனர். உள்ளே இருந்து ரமணா உடலை கைப்பற்றி விசாரிக்க துவங்கினர்.

காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, வேணு சிக்கினார். விசாரணையில் கதிரம்மாவுடனான கள்ளக்காதலுக்காக ரமணாவை கொன்றது அம்பலமானது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.