Categories: தமிழகம்

கச்சத்தீவு பற்றி பேசுவது பிரதமர் மோடியின் தேர்தல் STUNT : அண்ணாமலைதான் கண்டுபிடித்தது போல பிதற்றல்.. செல்லூர் ராஜூ!

கச்சத்தீவு பற்றி பேசுவது பிரதமர் மோடியின் தேர்தல் STUNT : அண்ணாமலைதான் கண்டுபிடித்தது போல பிதற்றல்.. செல்லூர் ராஜூ!

மதுரை கே.கே.நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். கச்சத்தீவு பற்றி பிரதமர் பேசுவது குறித்த கேள்விக்கு, “கச்சத்தீவை பற்றி பிரதமர் பேசுவது தேர்தல் ஸ்டண்ட் தான். அண்ணாமலை புதிதாக ஏதோ கண்டு பிடித்தவர் போல பேசுகிறார்.

கச்சத்தீவு விவகாரம் குறித்து அண்ணாமலைக்கு எதுவும் தெரியவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக பொய் சொல்கிறது என்றால், பாஜக பயங்கரமான பொய் சொல்கிறது. மோடி பத்து ஆண்டுகள் ஆட்சியில் கச்சத்தீவை மீட்டு எடுத்திருக்கலாமே. தேர்தலுக்காக மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல நடிக்கிறார்கள்” என்றார்

அதிமுகவுக்கு பாமக உயிர் கொடுத்தது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “எங்கே தங்களுக்கு அதிகமான தொகை கிடைக்கும், ராஜ்யசபா சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கலைஞர் குடும்பம் போல, ராமதாஸ் குடும்பமும் குடும்ப அரசியல் செய்கிறது. பாஜக கூட்டணியை ராமதாஸ் ஏற்கவில்லை, அன்புமணியின் அழுத்தத்தில் தான் ஏற்று கொண்டுள்ளார். அதிமுகவுக்கு பாமக உயிர் கொடுத்தது என அன்புமணி சொல்வதெல்லாம் பெரிய ஜோக் தான்” என்றார்

அதிமுகவுக்கும் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என்ற முதலமைச்சரின் பேச்சு குறித்த கேள்விக்கு, “திமுக கொண்டு வரும் திட்டங்களுக்கு கலைஞரின் பெயர் வைப்பதற்கு காரணம் என்ன ஏன் பெரியார் அண்ணா ஆகியோரின் பெயர்களை வைப்பதில்லை. அதிமுக திராவிட சித்தாந்தத்தில் சரியாகப் பணிக்கிறது.

திமுக பேரளவில் தான் அண்ணாவின் பெயரை பயன்படுத்துகிறது, திமுகவினர் கலைஞரையே மறந்து விட்டார்கள். தமிழகத்தில் மன்னர் பரம்பரையை ஒழித்தாலும் திமுகவின் வாரிசு அரசியலை ஒழிக்க முடியவில்லை” என்றார்

ஜெயலலிதா இருக்கும் போது இரண்டாம் கட்ட தலைவர்கள் இப்படி பேசியதில்லையே, எடப்பாடி வந்தவுடன் இது போல் பேசுகிறார்களா என்ற கேள்விக்கு, “அதிமுகவில் ஜெயலலிதாவை திட்டாதவர் யாருங்க.. நாவலர், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் ஜெ.வை திட்டினார்கள்.ஜெயலலிதாவும் உதிர்ந்த ரோமம் என திட்டினார்.

யாரும் கூட்டணியில் வரவில்லை என்றால் கவலைப்படமாட்டார். வைகோவை 2011ல் அழைத்தார், அப்போது வந்திருந்தால் கட்சி நிலைத்திருக்கும். தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான். ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. இந்த தேர்தலிலும் அதைத்தான் மக்கள் பார்ப்பார்கள்” என்றார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

1 minute ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

14 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

50 minutes ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

1 hour ago

விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…

2 hours ago

நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் தியானம்.. இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி வழிபாடு!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…

2 hours ago

This website uses cookies.