பிரபல தமிழ் திரைப்பட நடிகைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்படத் தொழிலில் பஞ்சாபை சேர்ந்த பிரபலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனத்தினை விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரிய முதலியார் சாவடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளனர்.
அப்போது பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை நடிகையுடன் ஒன்றாக இருந்துள்ளனர். இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்பாக இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்தை நிறுத்தினர்.
திருமணத்தை நிறுத்தி, இருவரும் பிரிந்தாலும், தொழில் ரீதியாக இருவரும் நட்புடனே பட தயாரிப்பு நிறுவன தொடக்கத்தில் பிஸியாக இருந்தனர். படத்தையும் தயாரித்தனர். ஆனால் படத்தை வெளியிட போதிய பணம் தேவைஎன்றிருந்தது.
அந்த நேரத்தில்தான் பிரபல நடிகையுடன் அந்த பிரபலம் ஒன்றாக இருந்த புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டல் விடுத்தாகவும், பண மோசடி செய்ததாகவும், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக பிரபல நடிகை தரப்பில் குற்றப்பிரிவு போலீசில் கடந்த 26 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த பிரபலத்தை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கிற்கு தமிழ்நாட்டின் மிக பிரபலமான முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் அழுத்தம் கொடுத்ததால் மட்டும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் தீயாக பரவி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.