துரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று திருவாரூர் வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பாஜ மாவட்டத் தலைவர் விகே.செல்வம் தலைமையில் விளமல் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து துர்காலயா சாலை, வடக்கு வீதி, கீழவீதி,தெற்கு வீதி வழியாக இரு சக்கர வாகன அணி வகுப்பு செய்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.
இதையும் படியுங்க: காரை வழிமறித்து நகை வியாபாரியிடம் கைவரிசை.. கிலோ கணக்கில் நகை கொள்ளை..!!
அங்கு செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், பாஜக மதுரையில் நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் எவ்வளவு தடங்கல்கள் ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு ஏற்படுத்துகிறார்கள்.
தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை வைத்துதான் திமுக அரசியல் செய்துவருகிறது. ஆனால் பண்டைய காலத்தில் அதுஎடுபட்டது தற்பொழுது அது எடுபடவில்லை. கீழடியை பொறுத்தமட்டில், ஏற்கனவே சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சான்றுகள் தேவைப்படுகிறது.
தமிழுக்கு தொண்டு செய்வதுபோல் காட்டிக்கொண்டு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள் வரும் தேர்தலில் அது எடுபடாது. விஜய் அரசியலுக்கு வந்ததால் யாருக்கு லாபம் நஷ்டம் என்பது தேர்தல் முடிந்த பின்புதான் தெரியும், அதே நேரத்தில் திமுகவை ஆட்சியிலிருந்து இறக்க நினைக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலில் நிற்க வேண்டும்.
மேலும், எங்களுடைய கூட்டணியில் தேமுதிக கண்டிப்பாக வரவேண்டும் அப்போதுதான், திமுகவை தோற்கடிக்க முடியுமென நான் கூறியுள்ளேன். அதுபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒருமித்த கருத்தோடு வரவேண்டும்.
வரும் சட்டமன்ற தேர்தலில், கூட்டணி கட்சி ஆட்சி அமையுமா தனிகட்சி ஆட்சி அமையுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, எங்களுடைய கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும். அதேநேரத்தில், அதிமுக பழனிச்சாமிதான் முதலமைச்சர் என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.