Categories: தமிழகம்

‘517 வாக்குறுதியில் 10 வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றல’: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!!

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை அறிமுகம் செய்துவத்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை மாநில தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாது, ஆங்கிலேயர் எப்போது செல்வார்கள் என்று சிந்தித்ததை போல் திமுக ஆட்சி எப்போதும் போகும் என மக்கள் காத்திருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றாலும் அது மணக்காது. கரூரிலிருந்து ஒரு டூரிஸ்ட் அமைச்சர் வந்துள்ளார். அங்கிருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து அரசியல் செய்கிறார். இதை கோவை மக்கள் ரசிக்க மாட்டார்கள் மக்களின் ஆதரவு எப்போதும் பாஜகவிற்கு இருக்கும். மக்களுக்கும் வாக்குபெட்டிக்கும் இணைப்பு பாலமாக பாஜக வேட்பாளர்கள் இருக்க வேண்டும். இந்த நகர்புற தேர்தலில் தனியாக பாஜக போட்டியிடுகிறது. பாஜக பலத்தை தெரிந்து கொள்ளவே தனித்து போட்டியிடுகிறோம்.

இந்த தேர்தல் சமூக வலைதள தேர்தலாக மாறியுள்ளது. ஸ்மார்ட் வொர்க் மூலமாக மொபலை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் தொடர்பான காட்சிகள் மற்றும் படக்காட்சிகளை அதிகம் பகிர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். நேற்றில் இருந்து திமுக பொய் சொல்ல துவங்கிவிட்டது. பா.ஜ.க.,வை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும். என முதல்வர் முடிவு செய்து விட்டார்

நீட் தேர்வை பாஜக திணித்தது என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின் காங்கிரஸ் காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களை காட்டிலும் கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்கு கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு காரணமாக அதிக கட்டணம் வசூலிக்க முடியாமல் தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளை இயக்கி வரும் திமுகவினர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு பக்கம் திமுக தனது அதிகாரத்தை காட்டுகிறது எனவும், ஒருபக்கம் பாஜக மோடியின் சாதனைகளை சொல்லி வெற்றிபெற உழைக்கிறோம் எனவும் தெரிவித்தார். 2016ல் நீட் தேர்வு மசோதா குடியரசு தலைவர் வரை சென்று திரும்ப வந்துள்ளது.

ஆனால் அதை நினைவில் கொள்ளாமல் திமுக கூட்டணி கட்சிகளை மட்டும் இணைத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் கூறிய அவர், நீட் தேர்வு மக்களுக்கு எதிரானது அல்ல எனவும் கூறினார். 517 வாக்குறுதியில் 10 வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை எனக்கூறிப்பிட்ட அவர், கோவையில் அடிப்படைவாத அமைப்புகள் பிரச்னை செய்வதாகவும் ஆனால் பாஜக வேட்பாளர்கள் எங்களது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் தாமரையை எடுத்து செல்வதே இலக்கு எனக்குறிப்பிட்ட அவர், கர்நாடகாவில் மதப்பிரச்னையை உருவாக்கியதே காங்கிரஸ் தான் எனவும் இந்து என்பது மதமே கிடையாது, அது ஒரு வாழ்வியல் முறை எனவும் மதம் என்ற வார்த்தையை பயன்படுத்துபவர்கள் புரிதல் இல்லாதவர்கள் எனவும் விமர்சித்தார்.

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதை தமிழக அரசு எதிர்ப்பது குறித்து கேட்ட போது, முதலமைச்சர் எதிர்கட்சி தலைவராக இருந்த போது எத்தனை முறை சிபி ஐ விசாரணைக்கு கோரினார் என்பதை எண்ணிப்பாருங்கள் என பதிலளித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

7 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

8 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

9 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

9 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

10 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

10 hours ago

This website uses cookies.