Categories: தமிழகம்

பாகிஸ்தானை போல் இந்தியாவை பிளவுபடுத்தப் பார்க்கிறார் அமித்ஷா: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு..!!

கோவை: பாகிஸ்தான் நாடு மொழி திணிப்பால் பிளவுற்று உள்ளதை போல், இந்தியை திணித்து இந்தியாவை பிளவுபடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா இறங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

பெட்ரோல் டீசல் மற்றும் கியாஸ் விலையை கட்டுப்படுத்த கோரியும், ஜி.எஸ்.டி வரியை குறைக்க கோரியும் கோவையில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் 56 பேர் கோவையிலிருந்து சென்னைக்கு 18 நாட்கள் 550 நடைபயண பேரணி மேற்கொள்கின்றனர்.

இந்த பேரணியை கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியசைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, நடைபயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டு. கியாஸ் விலையை குறைக்க வேண்டும்.

இந்த பேரணியை துவக்கி வைக்க கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகி சனல் என்பவர் இங்கு வந்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. இது கட்சிக்கும், நமக்கும் பலன் அளித்துள்ளது. 900 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியதால் ஆயுள் நீடித்தது, இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் உழைக்க முடியும்.

ஜி.எஸ்.டி வரியை காங்கிரஸ் கொண்டு வந்தது. ஆனால், குறைந்தபட்ச வரியை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. இதற்கு அப்போதையை எதிர் கட்சியாக இருந்த பா.ஜ.க எற்றிப்பு தெரிவித்துவிட்டு, தற்போது 18 சதவீதத்திற்கு மேல் வரி விதித்துள்ளனர்.

இந்தி மொழி 75 சதவீதம் அரசு ஆட்சி மொழியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தெரிவிக்கிறார்.

இந்தி பேசும் மக்களின் ஆதரவுடன் முன்னாள் பிரதமர் நேரு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக கொண்டுவந்தார்.

பாகிஸ்தானில் இதே போல் மொழியை திணித்த காரணத்தால் தான் இரு மொழி நாடாக பிளவுற்று உள்ளது. அதே போல் இந்தியை திணிக்கும் முயற்சியில் அமித்சா இறங்கியுள்ளார்.

மொழி கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும். இலங்கையில் ஆட்சி செய்யும் திறமை இல்லாத காரணத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை பிரச்சனையும் இந்தியா பிரச்சனையும் வேறு.

இந்தியா பொருளாதார வீழ்ச்சி அடைய காரணம் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வால் தான். மேலும், ரூ.26 லட்சம் கோடி வரி விதிப்பும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

7 minutes ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

38 minutes ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 hour ago

எங்க கூட்டணிக்கு விஜய் வந்தால் சிவப்பு கம்பளம் தயார்… பாஜக பகிரங்க அறிவிப்பு!

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…

2 hours ago

எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…

3 hours ago

16 வயது சிறுவனுடன் உடலுறவு.. வசமாக சிக்கிய 35 வயது டீச்சர்!

16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…

3 hours ago

This website uses cookies.