தூத்துக்குடி உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட்டது குறித்து அரசாணை வெளியீட்டை தொடர்ந்து தூத்துக்குடியில் உட்பட தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உப்பள தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இன்று உப்பள தொழிலாளர் நல வாரியத்தை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உப்பள தொழிலாளர்கள் ஒன்று கூடி பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தேர்தல் கால வாக்குறுதியான மழைக்கால நிவாரணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட்டதற்கு உப்பள தொழிலாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.