நீட் மசோதா விவகாரத்தில் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நாளை டெல்லி செல்ல உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் 11 மசோதாக்களை ஆளுநர் இதுவரை ஒப்புதலுக்காக அனுப்பவில்லை என திமுக அரசு குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை ஆதினத்தை சந்திக்க சென்ற ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டதுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நாளை டெல்லி செல்ல உள்ளார். மயிலாடுதுறையில் எதிர்ப்புகள் வலுத்ததால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து புகார் கூற செல்கிறாரா அல்லது, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக செல்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.