Categories: தமிழகம்

ராமநாதபுரத்தில் தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு.. நூலிழையில் மாறும் வெற்றி?.. ஷாக்கான தொண்டர்கள்..!

இந்திய நாடாளுமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக 543 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இதில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மற்றும் கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், ஒரு தொகுதியை தவிர பெரும்பான்மையான தொகுதிகளில் இப்போது திமுக கூட்டணியே, முன்னிலை வகிக்கிறது.

வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில் இராமநாதபுரத்தில் சுமார் 30 சதவீத தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், காலை 8 மணிக்கு தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பல தபால் வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, முறையான கையெழுத்து இல்லை உள்ளிட்ட காரணங்களால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியே இராமநாதபுரத்தில் சுமார் 30 சதவீத தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், முகவர்கள் சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடியும் தருவாயில் இது தொடர்பாக முகவர்கள் மீண்டும் கேள்வி எழுப்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.