மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று காலை 8 மணி முதல் வாசிக்க தொடங்குகிறது தேர்தல் ஆணையம். 543 மக்களவைத் தொகுதிகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வரும் நிலையில், முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. பின்பு சுற்றுவாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கவனத்தை பெற்ற வேட்பாளர்கள் மதியம் வரை பெற்ற வாக்கு விபரங்கள் வெளியாகி உள்ளது.
கோவை தொகுதியில், போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை 62,486 வாக்குகள் பெற்றுள்ளார். தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் 41,156 வாக்குகள் பெற்றுள்ளார். வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட மன்சூர் அலிகான் 618 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்ட தங்கர் பச்சான் 95, 261 வக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வீரப்பனின் மகள் வித்யா ராணி 18,717 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.
மயிலாடுதுறை தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட காளியம்மாள் 58,545 வாக்குகள் பெற்று நாலாம் இடத்தில் உள்ளார். விருதுநகர் தொகுதியில், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 55,376 வாக்குகள் பெற்றுள்ளார். விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட விஜய பிரபாகரன் 113,490 வாக்குகளை பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில், பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் 73,644 வாக்குகளை பெற்றுள்ளார். பெரம்பலூர் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் 65 ஆயிரத்து 744 வாக்குகளை பெற்றுள்ளார். தேனி தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டிடிவி தினகரன் 60,757 வாக்குகளை பெற்றுள்ளார்.
2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்குகின்றன. தற்போது திமுக கூட்டணியில் எவ்வித…
வெளியானது பீனிக்ஸ் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள “பீனிக்ஸ்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை…
ஓசூர் அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் பாட்டீல் மற்றும் மஞ்சுளா தம்பதிக்கு 2 மகன் மற்றும்…
அரசு அதிகாரிகளுடன் உல்லாசமாக இருந்து தெரியாமல் வீடியோ எடுத்து பணம் பறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் அய்யங்குளம் பகுதியை…
வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குணசுந்தரி. இவரின் கணவர் பாலசந்தர் (50) திமுக பிரமுகர். இதையும்…
சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”.…
This website uses cookies.