Categories: தமிழகம்

தேறவே தேறாது.. பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த நட்சத்திர வேட்பாளர்கள்..!

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று காலை 8 மணி முதல் வாசிக்க தொடங்குகிறது தேர்தல் ஆணையம். 543 மக்களவைத் தொகுதிகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வருகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வரும் நிலையில், முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. பின்பு சுற்றுவாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கவனத்தை பெற்ற வேட்பாளர்கள் மதியம் வரை பெற்ற வாக்கு விபரங்கள் வெளியாகி உள்ளது.

கோவை தொகுதியில், போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை 62,486 வாக்குகள் பெற்றுள்ளார். தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் 41,156 வாக்குகள் பெற்றுள்ளார். வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட மன்சூர் அலிகான் 618 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்ட தங்கர் பச்சான் 95, 261 வக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வீரப்பனின் மகள் வித்யா ராணி 18,717 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.

மயிலாடுதுறை தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட காளியம்மாள் 58,545 வாக்குகள் பெற்று நாலாம் இடத்தில் உள்ளார். விருதுநகர் தொகுதியில், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 55,376 வாக்குகள் பெற்றுள்ளார். விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட விஜய பிரபாகரன் 113,490 வாக்குகளை பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில், பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் 73,644 வாக்குகளை பெற்றுள்ளார். பெரம்பலூர் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் 65 ஆயிரத்து 744 வாக்குகளை பெற்றுள்ளார். தேனி தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டிடிவி தினகரன் 60,757 வாக்குகளை பெற்றுள்ளார்.

Poorni

Recent Posts

திமுக அரசுக்கு நாள் குறிச்சாச்சு… அறிவாலயத்தை அலற விட்ட மத்திய அமைச்சர்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சட்டம் தன் கடமையை செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.…

5 hours ago

திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!

திருமலை ஒன் டவுன் காவல் நிலையத்தில் ஜனசேனா திருப்பதி பொறுப்பாளர் கிரண் ராயல் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையும்…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு ஓகே… அப்படியே பல்கலை., பாலியல் விவகாரத்திலும் நடவடிக்கை எடுங்க : அண்ணாமலை அதிரடி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

7 hours ago

எப்ப பார்த்தாலும் நித்யா மேனனை த***ட்டே இருப்பான் : இயக்குநரை ஒருமையில் விளாசிய பிரபலம்!

பிரபல பத்திரிகையாளர் கூறிய கருத்துக்கள் கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக அவன், இவன் என ஒருமையில் இயக்குநரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.…

8 hours ago

விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை…

10 hours ago

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் : பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு குறித்து விஜய் கருத்து!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…

10 hours ago

This website uses cookies.