தமிழகம்

கனிமொழி கேள்விக்கு திமுக பதில் கூற முடியுமா? தடம் மாறிய தமிழிசை!

காவிரி பிரச்னைக்கு டிகே சிவகுமாரை அழைத்து வந்து ஆலோசனை நடத்துவீர்களா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்றுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கண்டித்தும் பாஜக தரப்பில் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் அதிக கொலைகள் நடைபெறுகின்றன. நெல்லையில் மட்டும் 46 கொலைகள் நடந்திருக்கிறது. ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீடியோ போடுகிறார், ‘என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என்று.. அடுத்தநாளே அவர் உயிர் பறிக்கப்படுகிறது.

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? ஆனால், ரொம்ப இலகுவாக சொல்கிறார்கள், தனிப்பட்ட பிரச்னைக்கு நடக்கும் கொலைகளை எல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனச் சொல்லி, எவ்வளவு தவறாக இவர்கள் நடந்து கொள்கிறார்கள். எனவே, இன்று தமிழக மக்களின் நலன் காப்பதற்காகவே நாங்கள் இந்த கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

இதேபோல், ஒரு கருப்பு கொடியை வைத்துக் கொண்டு டாஸ்மாக்கை ஒழிப்போம் என உங்கள் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டீர்கள் அல்லவா? அதற்கு பதில் சொல்லுங்கள் இப்பொழுது. கனிமொழி சொன்னாரே, தமிழ்நாட்டில் விதவைகள் அதிகமாக இருக்கிறார்கள், ஏனென்றால் டாஸ்மாக் தான் காரணம் என்றார்கள்.

அதற்கு பதில் என்ன? தமிழ்நாட்டு மக்கள் நன்றாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், பொதுமக்களே உங்கள் பிரச்னைகள் எவ்வளவோ தீர்க்கப்படாமல் உள்ளது. ஆனால், இல்லாத ஒரு அறிவிப்பை கையில் எடுத்துக் கொண்டு, இல்லாத ஒரு திணிப்பைக் கையில் எடுத்துக்கொண்டு இவர்கள் இன்று கூட்டம் நடத்துகிறார்கள். தமிழக மக்கள் திமுகவை மன்னிக்கவேமாட்டார்கள்.

காவிரி பிரச்னைக்கு இதேபோல கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரை அழைத்து கூட்டம் போட்டுவிடுவீர்களா? காவிரி பிரச்னை தீர்ந்துவிட்டதா? மேகதாது அருகில் அணை கட்டுவதாக அவர்கள் சொல்கிறார்கள். என்றாவது உங்களுடைய குழுவை கர்நாடகாவிற்கு அனுப்பி உள்ளீர்களா? கர்நாடகத் தலைவர்களை அழைத்து வந்து இங்கு கூட்டம் நடத்தினீர்களா?

இதையும் படிங்க: ஜனநாயகனை கைப்பற்றி ஜாக்பாட்.. பல கோடிகளுக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

தமிழக விவசாயிகளே உங்களுக்கு கிடைக்க வேண்டிய காவிரியைப் பற்றி இவர்களுக்கு இங்கு அக்கறை இல்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை இன்னும் தீர்க்கப்படாத பிரச்னையாகவே இருக்கிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். தமிழக விவசாயிகளே இவர்களுக்கு உங்களைப் பற்றி கவலை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

8 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

9 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

9 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

10 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

11 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

11 hours ago

This website uses cookies.