தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா : 22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கு பாதிப்பு..!!
19 January 2021, 7:18 pmசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்தது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
படிப்படியாக குறைந்து வரும் தொற்றின் எண்ணிக்கை 600த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,31,866ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,281 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 722 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 14 ஆயிரத்து 098 ஆக அதிகரித்துள்ளது.
0
0