கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பலி… நேற்றைய விட தமிழகத்தில் பாதிப்பும் இன்று அதிகம்தான்..!!
Author: Babu Lakshmanan21 October 2021, 7:49 pm
சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று அதிகரித்துள்ளது.
கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 1,164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,91,797ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, இன்று சென்னையில் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 137 பேருக்கும், செங்கல்பட்டுவில் 98 பேருக்கும், ஈரோட்டில் 89 பேருக்கும், திருப்பூரில் 73 பேருக்கும் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,968ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,412 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 42 ஆயிரத்து 039 ஆக அதிகரித்துள்ளது.
0
0