மதுரை : உசிலம்பட்டி அருகே விவசாயியிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிமின்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி ஒன்றியம் உத்தப்பநாயக்கனூர் மின்சார அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக வேலை பார்த்து வருபவர் சக்தி என்ற சக்திவேல் (45). இவரிடம் ரெட்டியபட்டியைச் ஊரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தோட்டத்திற்கு இலவச மின்சாரம் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இலவச மின்சாரம் வழங்குவதற்கு உதவி மின் பொறியாளர் சக்தி என்ற சக்திவேல் லஞ்சம் பணம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிகுமார் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இடம் இது குறித்து புகார் செய்துள்ளார்.
இன்று லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியசீலன் இன்ஸ்பெக்டர் குமரகுரு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் போலீசார் வழிகாட்டுதல்படி, சசிகுமார் உதவி மின் பொறியாளர் சக்திவேலிடம் ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.