திருச்சி : தமிழக மீனவர்களை மற்ற நாட்டுகாரர்களால் கைது செய்யப்படுவதற்கு சட்டத்திருத்தம் தேவை என்று காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் வசந்த் அன்கோ 104வது கிளை திறப்பு விழா அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்
வசந்த்விஜய், வசந்தகுமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி புதிய கிளைகளை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பேசியதாவது :- அப்பாவுடைய மறைவிற்குப் பிறகு அரசியல் ஈடுபட்டுள்ளதால் திரைப்படங்களில் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளி கொடுத்துள்ளேன். வாய்ப்பு வருகின்றது. ஆனால், தொகுதியை பார்ப்பதால் வாய்ப்பு கிடைக்கும்போது நடிப்பேன்.
நமது நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கும் போது மற்ற நாட்டுகாரர்களால் சிறைப்பிடிக்கப்
படுகின்றனர். இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன்.
தற்போது கன்னியாகுமாரி கடலோரங்களில் தடுப்புச்சுவர் தூண்டில் வளைவு உள்ளிட்ட பணிகளை வேகப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரை பார்த்து கோரிக்கை விடுத்துள்ளேன். குளச்சல் துறைமுகம் விரிவாக்கம் மேலும் அதை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளேன்.
கன்னியாகுமரி பகுதிகளில் இடங்களை கண்டறிந்து அவற்றை சுற்றுலாத்தலமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறேன் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.