நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு : 4 பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ளது நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுளள்தாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர், நேற்று முன்தினம் குவிந்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது.
பின்னர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, அலுவலகத்தை திறந்து சோதனையை மேற்கொண்டனர்.
அனைத்து அறைகளையும் சோதனை செய்து, ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
பிற்பகல் தொடங்கிய இந்த சோதனையானது நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. பின்னர் 4 பைகளுடன் வருமான வரித்துறையினர் வெளியேறினர். அந்த பைகளில் பணம் இருந்ததாகவும் தகவல் வெளியபாகியுள்ளது.
அலுவலகத்தை சுற்றியுள்ள மெக்கானிக் கடை, கூரியர் நிறுவனம், ஜெராக்ஸ் கடை உட்பட 7 கடைகள் மற்றும் 2 வடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சில முக்கிய குறிப்புகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.