நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு : 4 பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ளது நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுளள்தாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர், நேற்று முன்தினம் குவிந்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது.
பின்னர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, அலுவலகத்தை திறந்து சோதனையை மேற்கொண்டனர்.
அனைத்து அறைகளையும் சோதனை செய்து, ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
பிற்பகல் தொடங்கிய இந்த சோதனையானது நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. பின்னர் 4 பைகளுடன் வருமான வரித்துறையினர் வெளியேறினர். அந்த பைகளில் பணம் இருந்ததாகவும் தகவல் வெளியபாகியுள்ளது.
அலுவலகத்தை சுற்றியுள்ள மெக்கானிக் கடை, கூரியர் நிறுவனம், ஜெராக்ஸ் கடை உட்பட 7 கடைகள் மற்றும் 2 வடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சில முக்கிய குறிப்புகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.