Categories: தமிழகம்

டேங்கர் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் தலை நசுங்கி பலி.. மாவட்ட செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு ..!

கரூர் அருகே 100 அடி ஆழமுள்ள கல்குவாரி குழியில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு – பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியதாக குவாரியில் பங்குதாரராக உள்ள அமமுக மாவட்ட செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் க. பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு சில கல்குவாரிகள் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலான அளவு பள்ளம் தோண்டி பாறைகளை வெட்டி எடுத்து கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட் மணல்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தாழையூத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ப்ளூ மெட்டல் கல்குவாரியில் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வந்த நிலையில், 100 அடி ஆழக்குழியில் 3 அடி அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதை எடுப்பதற்காக நாகப்பட்டினம் ஆயங்குடி பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (41) என்ற ஓட்டுனநரை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். தண்ணீரை எடுப்பதற்காக 22000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரியில் தண்ணீர் நிரப்பி, மேலே வந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக 75 அடி உயரத்திலிருந்து லாரி பாறைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு, பாறை குழி இடுக்கில் தலை மற்றும் உடல் பகுதிகள் நசுங்கி மயக்க நிலையில் சிக்கி இருந்த ஓட்டுநரை கீழே சென்று மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் 100 அடி ஆழமுள்ள கல்குவாரி குழியில் உரிய பாதுகாப்பின்றி லாரி ஓட்டுநரை பணியில் ஈடுபடுத்தியதாக செல்வ விநாயகா ப்ளூ மெட்டல் உரிமையாளர்களின் ஒருவரான அமமுக மாவட்ட செயலாளர் தங்கவேல் மற்றும் பங்குதாரர்களான சுப்பிரமணி, சக்திவேல், கந்தசாமி ஆகிய 4 பேர் மீது க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.