ஆடி அமாவாசை தினமான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் காலை முதல் ஏராளமானோர் மறைந்த தங்கள் மூதாதையர்களை நினைத்து கடலில் குளித்து பலிகர்மம் செய்து தர்ப்பனத்தில் ஈடுபட்டனர்.
ஆடி அமாவாசை தினத்தில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், பச்சரிசி, தர்ப்பை போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும். குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டு இரண்டு அமாவாசைகள் வருவதால் முதல் அமாவாசையான இன்று காலை கன்னியாகுமரியில் ஏராளமானோர் கடலில் புனித நீராடி பலி கர்மம் செய்து தர்ப்பணத்தில் ஈடுபட்டனர். பின்னர், பகவதி அம்மன் கோவிலில் முன்னோர்களின் பெயரைச்சொல்லி அர்ச்சனைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். கடலில் பக்தர்கள் நீராடுவதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல, ஆடி அமாவாசை முன்னிட்டு கோவையில் 2000 வருடத்திற்கு முன்பு பழமை வாய்ந்த பேரூர் கோவிலில் மூதாயர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலையில் இருந்தே கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறை முயல் ஆற்றில் தங்கள் மூதாயர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வருகின்றனர். கடந்த வருடம் போல் இல்லாமல் இந்த வருடம் மழைப்பொழிவு இல்லாததால் ஆற்றில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே கோவில் நிர்வாகம் தர்ப்பணம் செய்யும் பக்தர்களுக்கு சஃபர் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அதிகாலை முதற்கொண்டு பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.