செம்பட்டி அருகே, டாஸ்மாக் பாரில் தகராறு. பார் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த, வீரக்கல் அருகே காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது. இந்த மது கடை அருகே பார் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை வீரக்கல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (37) என்பவர் பாரில் பணியாற்றி கொண்டிருந்தார். அவருடன் வேலகவுண்டன்பட்டியைச் சேர்ந்த, பழனியப்பன் (42) என்பவர் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
மேலும் படிக்க: அதிமுக வென்றால் இன்னோவா கார், 5 சவரன் தங்கச் சங்கிலி : பரிசு அறிவித்த முன்னாள் அமைச்சர்!
அப்போது, கூத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் வெளியூரை சேர்ந்த இரண்டு பேர் என, நான்கு பேர் மது அருந்த வந்துள்ளனர். அவர்கள், பாரில் மது அருந்திவிட்டு செல்லும்போது, அவர்களிடம் பார் ஊழியர் செல்வராஜ் என்பவர், அவர்கள் சாப்பிட்ட சிக்கன், மீன், முட்டை மற்றும் குடிதண்ணீர் பாட்டில்களுக்கு (வாட்டர் பாட்டில்) பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல், நீளமான கத்தியில் செல்வராஜ் என்பவரை பயங்கரமாக தலை மற்றும் கைகளில் வெட்டி உள்ளனர்.
மேலும் படிக்க: மத்திய அரசால் வள்ளி கும்மி கலைக்கு உரிய அங்கீகாரம்… கோவையில் கும்மி ஆடி வாக்குசேகரித்த அண்ணாமலை வாக்குறுதி..!!
பின்னர் பாரில் இருந்த, உணவுப் பொருள்கள் மற்றும் சேர், டேபில் உள்ளிட்டவைகளை மது போதையில் வீசி எறிந்து, உடைத்து சேதப்படுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த, செல்வராஜ் என்பவரை, அந்த பகுதியில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து, செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரக்கல் பாரில் தகராறில் ஈடுபட்டு, செல்வராஜ் என்பவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.