புல்லட் மீது கண்மூடித்தனமாக மோதிய டாடா சஃபாரி : தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி.. பதை பதைக்க வைக்கும் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2022, 9:47 am
Accident CCTV - Updatenews360
Quick Share

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கதிரவன் ஓட்டி வந்த டாடா சஃபாரி வாகனம் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி சுற்றுலாவிற்குச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை அறிந்த ஆழியார் காவல் நிலைய போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்ட இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சேக் முகமது என்பவரையும், பின்புறம் அமர்ந்து வந்த இதயத்துல்லாவுக்கும் காயம் ஏற்பட்டதால் இவரையும் முதலுதவி சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டனர் .

இதில் ஷேக்முகமது என்ற 40 வயதுடைய நபர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதயத்துல்லா என்ற நபருக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய கதிரவன் என்பவரை ஆழியார் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 355

0

0