தமிழகம்

அந்தரங்க உறுப்பிலும் டாட்டூ? திருச்சி ஏலியன்ஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்!

திருச்சியில், நாக்கைப் பிளந்து டாட்டூ போட்டது மட்டுமல்லாமல், அந்தரங்க உறுப்புகளிலும் டாட்டூ (Tattoo) போட்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

திருச்சி: திருச்சி சிந்தாமணி வென்ஸி தெருவைச் சேர்ந்த எஸ்.ஹரிஹரன் (25) என்பவர், மேல சிந்தாமணி பகுதியில் டாட்டூ சென்டர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு மும்பை சென்றுள்ளர். அங்கு, தனது நாக்கை இரண்டாக கிழித்தும், கண்களுக்கும் டாட்டூ (Tattoo) போட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ சிலவற்றையும் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், இதுபோன்று நீங்களும் செய்து கொள்ள வேண்டும் என்றால், தன்னைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் டாட்டூ போட்டுக் கொண்டு இரண்டு பேர், இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தனர். பின்னர், இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. எனவே, மருத்துவக் கட்டுப்பாடுகளையும் மீறி, ஆபத்தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து ஸ்ரீரங்கம் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் புகார் ஒன்றை அளித்தார். இந்தப் புகாரின் பேரில், டாட்டூ சென்டர் நடத்தி வந்த ஹரிஹரன் மற்றும் அவரிடம் நாக்கைப் பிளந்து டாட்டூ குத்திக் கொண்டவரும், அவரது நண்பருமான திருவெறும்பூர் கூத்தைப்பாரையைச் சேர்ந்த வி.ஜெயராமன் ஆகியோரை கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதையும் படிங்க: “படையப்பா”படத்தில் சூரி…வெளிவந்த தகவல்…ஆச்சரியத்தில் கே.எஸ்.ரவிக்குமார்….!

மேலும் 17 வயது சிறுவனையும் எச்சரித்து போலீசார் அனுப்பினர். அது மட்டுமல்லாமல், டாட்டூ சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், உடலின் அந்தரங்க பாகங்களிலும் டாட்டூ போட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், இவ்வாறு அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ போடுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளதும், இதுவரை மூன்று பேருக்கு நாக்கு அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டதும், இதன் மூலம் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

23 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

24 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

24 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.