ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்து டீக்கடையில் வாழைப்பழம் மற்றும் டீ சாப்பிட்டுவிட்டு கடையில் அமர்ந்து புகை பிடித்துக்கொண்டு இருந்தவர்களிடம் புகை பிடிப்பது மிகவும் உடல் நலத்திற்கு கேடு என டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள சிறப்பு இலக்கு படையில் பயிற்சி பெற்று வரும் IFS அதிகாரிகளை நேற்று சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று இரவு சத்தியமங்கலத்தில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் அவர் வழக்கம்போல் இன்று காலை உடற்பயிற்சி செய்துவிட்டு சத்தியமங்கலம் அருகே உள்ள சின்னட்டிபாளையம் என்ற கிராமத்து டீக்கடைக்கு சென்ற அவர் கடையில் வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டு விட்டு கிராமங்களில் மட்டுமே இதுபோன்ற இயற்கையான வாழை பழங்கள் கிடைப்பதாகவும் சென்னை பகுதிகளில் இதுபோன்ற வாழைப்பழங்கள் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.
பின்னர் அக்கடையில் டீ வாங்கிக் குடித்த அவர் அருகில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருவர்களிடம் தயவு செய்து புகை பிடிக்க வேண்டாம் அது உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு எனக் கூறிய அவர் புகைப்பிடிப்பதை தவிர்த்து விட்டு கிராமங்களில் காலை டீ கடைகளுக்கு பசும்பால் கொடுக்கும் நீங்கள் மாட்டிலிருந்து கரக்கும் முதல் பாலை குடியுங்கள் உங்கள் உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும் என அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றார். இதன் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.