தமிழகம்

வகுப்பறையில் ஆசிரியருக்கு கத்திக்குத்து.. திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரச் செயல்!

திருமணத்திற்கு மறுத்ததால் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ரமணி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இன்றும் (நவ.20) அவர் வழக்கம்போல் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்து உள்ளார்.

அப்போது, திடீரென அங்கு வந்த நபர், ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ரமணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த சக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆசிரியை ரமணியை மீட்டு, அரசு மருததுவமனைக்கு சிகிக்சைக்காக அழைத்துச் சென்று உள்ளனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதனிடையே, கத்தியால் குத்திய நபர் குறித்து போலீசுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனைஒயடுத்து, பள்ளிக்கு வந்த போலீசார், அங்கு இருந்த நபரைப் பிடித்து விசாரித்து உள்ளனர். அப்போது, அவர் மதன் என்பது தெரிய வந்து உள்ளது.

மேலும் விசாரணையில், ஆசிரியை ரமணியை ஒரு தலையாக மதன் காதலித்து வந்ததாகக் கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறியதாலே ரமணியை கத்தியால் குத்திக் கொன்றதாகவும் மதன் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

அதேநேரம், கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி நான்கு மாதங்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்து உள்ளார். இதனிடையே, இவ்வாறு நடைபெற்ற சம்பவம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ரமணியை கொலை செய்த மதன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை ரமணியைக் கொன்றது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

இதையும் படிங்க: தியேட்டர் வாசலில் Movie Review வேண்டாம்.. வெறுப்பின் உச்சத்தில் பாரதிராஜா

இந்த நிலையில், இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

24 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

26 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

44 minutes ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

2 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

3 hours ago

This website uses cookies.