மாற்றுத்திறனாளி பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய வாலிபர்கள் : பெட்ரோல் பங்கில் பரபரப்பு.. ஷாக் வீடியோ!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெருவில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியராக பணியாற்றி வருபவர் தீர்த்தகிரி நகரை சேர்ந்த மாற்றுதிறனாளி கோவிந்தம்மாள் (22).
இவர் நேற்று மாலை பணியில் இருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் 300 ரூபாய்க்கு பெட்ரோல் போடசொல்லி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 300 ரூபாய் அனுப்பி உள்ளார்.
ரூபாய் 300-க்கு பெட்ரோல் போட்டதும்,150-ரூபாய் திருப்பி கேட்டுள்ளனர். அந்த பெண் 300 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டாகி விட்டது.
என கூறி உள்ளார்.
நான் 150-க்கு தான் பெட்ரோல் போடசொன்னேன்,எனவே மீதி 150 ரூபாய் பணம் தரவேண்டும் என தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசியுள்ளார். பேசியதுடன் மட்டும் நிற்காமல் பைக்கை விட்டு இறங்கி வந்து பெண்னை சராமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார்.
இதனால் பலத்த காயமடைந்த பெண் ஊழியர் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் ஊழியரை தாக்கிய மர்ம நபர் குறித்து சி.சி.டி.வி.காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பெண் ஊழியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.