தமிழகம்

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை.

2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த குற்ற வழக்கில், ஹைதராபாத்தில் உள்ள சரோவ் நகரை சேர்ந்த வெங்கடசாய் கிருஷ்ணா அதே பகுதியில் உள்ள பங்காரு மகிசம்மா கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.

ஹைதராபாத்தை சேர்ந்த அப்சரா கோயம்புத்தூரை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவரை மணந்து மணமுறிவு ஏற்பட்ட காரணத்தால் மீண்டும் ஹைதராபாத்திற்கு சென்று தன்னுடைய தாய் அருணாவுடன் வசித்து வந்தார்.

முன்னர் டிவி சீரியல்களில் சிறிய அளவிலான ரோல்களில் நடித்திருந்தார் அப்சரா. தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த அப்சரா மன நிம்மதிக்காக தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

அப்போது பங்காரு மகிசமா கோவில் பூசாரி வெங்கடசாய் கிருஷ்ணா உடன் அப்சராவுக்கு அறிமுகம் ஏற்பட்டு காதல் ஆக மாறியது.

36 வயது சாய் கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தன்னுடைய திருமணம், குழந்தைகள் ஆகியவற்றை மறைத்து அப்சராவுடன் நெருங்கி பழகி வந்தார் சாய் கிருஷ்ணா.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்சரா பூசாரி வெங்கடசாய் கிருஷ்ணாவுக்கு அழுத்தம் கொடுத்தார்.

எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்த சாய் கிருஷ்ணா தகுந்த நேரத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில் அப்சரா கோயம்புத்தூருக்கு செல்ல இருந்தார்.

இந்த நிலையில் அவரை தன்னுடைய காரில் ஏற்றி விமான நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறிய சாய் கிருஷ்ணா, சம்சாபாத் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அப்சராவை காருக்குள்ளேயே கடுமையாக தாக்கி நிலைகுலைய செய்து அவருடைய முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சு திணறல் ஏற்பட செய்து கொலை செய்தார் பூசாரி வெங்கடசாய் கிருஷ்ணா.

பின்னர் அப்சரா உடலுடன் காரை வீட்டிற்கு ஓட்டி சென்ற சாய் கிருஷ்ணா உடல் அழுகி துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க காருக்குள் ரூம் ஸ்பிரேயை தெளித்தார்.

இப்படி இரண்டு நாட்கள் அந்த உடலை காரிலேயே வைத்திருந்த சாய் கிருஷ்ணா பின்னர் காரை ஹைதராபாத் புறநகர் பகுதிக்கு ஓட்டி சென்று அங்கு திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் அப்சரா உடலை போட்டு அந்த சாக்கடையை மூடி சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக சிமெண்ட் பூசி வீட்டுக்கு சென்றார்.

இதற்கிடையே அப்சராவை தொடர்பு கொள்ள அவருடைய தாய் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அவரால் தொடர்பு கொள்ள இயலவில்லை.

அங்கு வந்த சாய் கிருஷ்ணா நானும் அப்சராவை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்று நடிக்க துவங்கினான் பூசாரி சாய் கிருஷ்ணா.

பின்னர் அப்சரா தாய் அருணா உடன் சேர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று அப்சராவை காணவில்லை என்று புகார் கொடுத்தான் பூசாரி சாய் கிருஷ்ணா.

அப்சராவின் தாய் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அப்சராவை தேடி வந்தனர்.

ஒரு கட்டத்தில் சாய் கிருஷ்ணா நடவடிக்கை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே தங்கள் விசாரணை வளையத்திற்குள் பூசாரி சாய் கிருஷ்ணாவை கொண்டு வந்த போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது அப்சராவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

அவன் அளித்த தகவல் அடிப்படையில் பாதாள சாக்கடையில் இருந்து அழுகி நிலையில் அப்சராவின் உடலை மீட்ட போலீசார் ரங்கா ரெட்டி நீதிமன்றத்தில் பூசாரி சாய் கிருஷ்ணா மீது கொலை வழக்கு தொடுத்தனர்.

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் அப்சராவின் தாய்க்கு ஒன்பது லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் நீதிமன்றத்திற்கு 25 ஆயிரம் ரூபாயும் சாய் கிருஷ்ணா செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

8 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

8 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

9 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

9 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

10 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

11 hours ago

This website uses cookies.