தென்காசியில் இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் அடித்து நெஞ்சில் மிதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ள காவலர்கள் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை அடித்து இழுத்து தரையில் போட்டு நெஞ்சில் காலால் மிதிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என புகார்களும் எழுந்து வருகிறது.
புதிய பேருந்து நிலையத்தில் அந்த இளைஞர்கள் மது அருந்தியதாகவும், அப்போது காவல்துறை அவர்கள் வாகனத்தின் சாவியை பிடுங்கியதால் வாக்குவாதத்தில் போலீசார் அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாகன சாவியை திருப்பித் தருமாறு கேட்டவரை கீழே தள்ளி காலால் நெஞ்சில் மிதித்தாக காவலர் அழகுதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.