தென்காசியில் இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் அடித்து நெஞ்சில் மிதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ள காவலர்கள் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை அடித்து இழுத்து தரையில் போட்டு நெஞ்சில் காலால் மிதிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என புகார்களும் எழுந்து வருகிறது.
புதிய பேருந்து நிலையத்தில் அந்த இளைஞர்கள் மது அருந்தியதாகவும், அப்போது காவல்துறை அவர்கள் வாகனத்தின் சாவியை பிடுங்கியதால் வாக்குவாதத்தில் போலீசார் அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாகன சாவியை திருப்பித் தருமாறு கேட்டவரை கீழே தள்ளி காலால் நெஞ்சில் மிதித்தாக காவலர் அழகுதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.