தற்போது கோடை வெயிலின் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் திடீரென தீப்பற்றி எரிவது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
மின்சார வயர்களில் இருந்து மின் கசிவு காரணமாக குடியிருப்பு வீடுகள் நிறுவனங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென தீபற்றுவதால் அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு எச்சரிக்கை நோட்டீஸ்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து இன்று காலை கோவை புதூர் பகுதியில் அமைந்துள்ள படுக்கை தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென மின்கசிவு காரணமாக தீப்பற்றியதால் நிறுவனத்தில் தயாரித்து வைத்திருந்த படுக்கைகள் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகியது.
தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகே உள்ள மற்ற நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் விதமாக தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு வந்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து கோவைப்புதூர் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.