காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளை சரமாரியாக தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். இது தொடர்பாக உள்துறை அமைச்ச அமித்ஷா உடனடியாக காஷ்மீருக்கு விரைந்து ஆலோசனையை நடத்தினார்.
அதே சமயம் சவதியில் இருந்து பிரதமர் மோடி, உடனே தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார். இந்த சம்பவத்தை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் பந்த் அறிவிக்கப்பட்டு, கடைகளை வியாபாரிகள் அடைத்துள்ளனர்.
என்ன நடந்தது என்ற திடுக்கிடும் தகவல்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
காஷ்மீர் பகல்காமில் மினி சுவிட்சர்லாந்து என கூறப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளது.
பகல்காமில் இருந்து 3.5 கிமீ மலையேறி சுற்றுலாபயணிகள் பைசரன் பள்ளத்தாக்கை அடைய வேண்டும்,பைசரன் பள்ளத்தாக்கு முழுக்க முழுக்க பைன் மரக்காடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு பகுதி.
பல ஆண்டுகளாக பைசன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லாததால் ராணுவம் போடப்படவில்லை. ராணுவம் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு சுற்றுலா பயணிகள் சுமார் 28 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர் தீவிரவாதிகள்
சுற்றுலா வந்த புதுமண ஜோடிகளிடம் சென்று உங்கள் மதம் என்ன என்று தீவிரவாதிகள் கேட்டுள்ளனர்.இஸ்லாமியர் இல்லை என தெரிந்த உடன் ஆண்களை மட்டும் சுட்டுக் கொலை செய்துள்ளனர் தீவிரவாதிகள்
இஸ்லாமியர் என கூறும் சுற்றுலா பயணிகளிடம் கலிமா எனப்படும் முஸ்லீம் மதம் தொடர்புடைய வாசகங்களை ஒப்புவிக்க கூறியுள்ளனர் தீவிரவாதிகள்.
கலிமா கூறத் தெரியாதவர்களையும் ஈவு இரக்கமின்றி நெற்றி பொட்டில் சுட்டு கொலை செய்துள்ளனர் தீவீரவாதிகள்.
தாக்குதலை தடுக்க வந்த உள்ளூர் கடை வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகளையும் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்துள்ளனர்
சுற்றுலா பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் நாடு, மாநிலம், ஊர், மதம் போன்றவற்றை தெரிந்து கொண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.