தஞ்சை : 17 வயது சிறுமியை தாயாக்கிய 12 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி, திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானார். இதையடுத்து, பிரசவவலி அதிகரிக்கவே குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது, அந்த 17 வயது சிறுமி கூறியதாவது :- எங்கள் வீட்டு அருகே உள்ள 12 வயது சிறுவன் தன்னுடன் நெருக்கமாக பழகினார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். தற்போது குழந்தை பிறந்துள்ளது, என்று போலீசாரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரிடமும் விசாரித்தனர்.
இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 12 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.