தஞ்சையில் கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பிரபல ஆடிட்டர் மகேஷ்வரன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தஞ்சை சேர்வைக்காரன் தெருவில் வசித்து வந்தவர் மகேஷ்வரன். பிரபல ஆடிட்டரான இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவறையை அதிக பணம் கட்டி ஏலம் எடுத்துள்ளார். இதனால், கார்த்தி என்பவருக்கும் ஆடிட்டர் மகேஷ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆடிட்டர் மகேஷ்வரன் நேற்று இரவு தனது தோட்டத்து வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்த போது, கார்த்தி, அர்ச்சுணன், மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர் அங்கு வந்து அவருடன் அமர்ந்து சகஜமாக பேசி உள்ளனர்.
தண்ணீர் குடிப்பதற்காக மகேஷ்வரன் எழுந்து சென்றபோது, பின்புறம் இருந்து அவரை நான்கு பேரும் சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சடலமானார். ஆடிட்டர் உயிர் இழந்ததை உறுதி செய்த கும்பல் அங்கு இருந்து தப்பி சென்றது.
தகவல் அறிந்து வந்த தஞ்சை மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா, டி.எஸ்.பி கபிலன் ஆகியோர் ஆடிட்டர் மகேஷ்வரன் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஆடிட்டர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய கொலையாளிகள் 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.