தஞ்சை திமுக உட்கட்சி தேர்தலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் திமுக மாவட்ட அலுவலகம் போர்களமாக மாறியது.
தஞ்சையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் திமுக பல்வேறு அணிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம் ஆதரவாளர்களும், தஞ்சை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆதரவாளர்களும் போட்டியிட்டனர்.
இரு முனை போட்டியில் தேர்தல் பார்வையாளர்கள் ஒரு தலைபட்சமாக துரை.சந்திரசேகரன் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்கியதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முரசொலி ஆதரவாளர்கள், எதிர்த்து போட்டியிட்ட பழனிமாணிக்கம் ஆதரவாளரான ஜெயராஜ் என்பவரை சரமாரியாக அடித்து உதைத்து புரட்டி எடுத்தனர்.
மேலும் கட்சி அலுவலகத்தை விட்டு காரில் சென்ற பழனிமாணிக்கம் காரை மறித்து அவரை தரக்குறைவாக திட்டினர். இந்த தகவல் அறிந்து வந்த பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள் கட்சி மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கட்சி அலுவலகம் போர்களமாக மாறியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.