தஞ்சை : தஞ்சை அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ராஜகிரியை சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகள் பிரசன்னா ரூபி (23). இவர் தஞ்சை அருகே களிமேடு ஜெபமாலைபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் அபிஷேக் (24) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிரசன்னா ரூபி வேளாங்கண்ணியில் வேலைக்கு சேர்ந்தார். இதை அறிந்த அபிஷேக் வேளாங்கண்ணி சென்று பிரசன்னா ரூபியிடம் காதலிப்பதாக தெரிவித்து திருமணம் செய்து கொள்ளலாம், என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய பிரசன்னா ரூபியும், அபிஷேக்குடன் பழகி வந்துள்ளார். மேலும், இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அபிஷேக், பிரசன்னா ரூபியை பிரிந்து ஊருக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. பிரசன்னா ரூபி போன் செய்தால் அபிஷேக் எடுப்பதில்லை என்றும், பிரசன்னா ரூபியிடம் பணம் கேட்டு அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரசன்னா ரூபி இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அபிஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.