தஞ்சை : தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1000 கிலோ குட்கா, 110 லிட்டர் போலி மதுபான பாட்டில்களை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தஞ்சையில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பல பார்களில் போலி மது பானங்கள் விற்கப்படுவதாகவும் வந்த தொடர் புகாரை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, தஞ்சை கரந்தை குடைக்காரத் தெருவில் வசித்து வரும் பிரபு என்பவரது வீட்டில் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் கட்டுக்கட்டாக 1000 கிலோ குட்கா, லேபில் இல்லாமல் 110 மதுப் பாட்டில்கள் இருந்ததை அடுத்து, அவற்றை பறிமுதல் செய்து, பிரபுவை கைது செய்து, அவர் பயன்படுத்தி வந்த காரையும் கைப்பற்றினர்.
பிரபுவிடம் நடத்திய விசாரணையில், திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக குட்கா பதுக்கி வைத்து இருந்ததும், போலி மதுப்.பாட்டில்கள், தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள செம்மீன் பாரில் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து, பிரபுவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.