தஞ்சை கீழவாசல் பகுதியில் டீ கடையில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் காயம் அடைந்தார். இரண்டு, இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்புக் கூடானது.
தஞ்சை கீழவாசல் நான்கு வழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது கண்ணையன் டீ ஸ்டால். கடையின் முன்பு சிலிண்டர் அடுப்பில் வைத்து பலகாரம் சுடும் போது, எதிர்பாரதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி உள்ளது.
இதனை பலகார மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்றத் தொடங்கியது. இதனை அடுத்து, டீ கடைக்குள் இருந்தவர்கள், டீ அருந்தி கொண்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பினர். இருந்த போதிலும், டீ கொளுந்து விட்டு எரிந்ததில், கடை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடானது.
கடை உரிமையாளர் பாலமுருகனுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்து குறித்து தஞ்சை கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.