Categories: தமிழகம்

ஓட்டுநர் தூங்கியதால் கோர விபத்து… அரசு பேருந்துடன் கார் மோதியதில் 3 பேர் பலியான சோகம்!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஆர்கெஸ்ட்ரா மற்றும் நடன குழு ஒன்று நேற்று இரவு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இன்று காலை மீண்டும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி டாடா சுமோ காரில் வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளமடம் லாயம் விளக்கு பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து ரோஸ் மியாபுரத்திற்கு சென்ற அரசு பேருந்து மற்றும் டாட்டா சுமோ கார் நேருக்கு நேர் அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காரில் இருந்தவர்கள் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் 12 பேர் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்துள்ளனர்,அவர்கள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டாட்டா சுமோவின் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.