மேடையில் இளையராஜா செய்த அந்த செயல்… அடுத்த நிமிடமே அமைதியான அரங்கம்…!

தமிழ் சினிமா ரசிகர்களை இன்று வரை தன் இசைiயால் கட்டி போட்டு இருப்பவர் தான் இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜா. தன்னுடைய பாடல்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இந்த நிலையில் சென்னை தீவுத்திடலில் இசையாணி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி ‘ராக் வித் ராஜா’ நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று இளையராஜாவின் இன்னிசையில் பாடியதோடு ரசிகர்களை இளையராஜாவின் இன்னிசை மழையில் நனையவிட்டனர்.

இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஜனனி ஜனனி என்றும் பாடலைப் பாடி ஆரம்பித்து இளையராஜா அதன் பிறகு தன்னுடன் பணியாற்றிய பாடகர்களை பற்றி பெருமிதமாக பேசினார். அத்துடன் தன்னுடைய திரையிசை பயணத்தையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது எஸ்பிபியை பற்றி இளையராஜா நினைவுகூர்ந்தார். என்னுடைய இசை பயணத்தில் எஸ்பிபிக்கு பெரும்பங்கு உண்டு. நாங்கள் 45 ஆண்டுகளாக நண்பர்களாகியிருந்தோம். ஆந்திராஇ கொல்கத்தா என எங்கு சென்றாலும் ஆர்மோனியப் பெட்டியுடன் நானும் பாலுவும் சென்ற பாடுவோம் என தனது அனுபவங்களை இளையராஜா பகிர்ந்தார். கொரோனாவால் பாதித்த எஸ்பிபி மறைவு தன்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியதாக இளையராஜா கூறினார். பின்பு எஸ்பிபிகாக அனைவரும் மௌன அஞ்சலி செலுத்துமாறு மேடையில் கூறினார். இதைக் கேட்ட அரங்கமே அமைதியானது.

இதனிடையே எஸ்பிபி பல பாட்டுக்கச்சேரிகள் ஏற்பாடு செய்திருந்த நேரத்தில் இளையராஜா தன் பாடல்களை ராயல்டி இல்லாமல் பாடக் கூடாது என அனைத்து பாடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் எஸ்பிபி மிகுந்த சிக்கலை சந்தித்தார். எஸ்பிபி, இளையராஜா இடையே மனகசப்பு இருந்தது. இந்நிலையில் எஸ்பிபியை நினைத்த இளையராஜா வருந்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. இதை பார்த்த ரசிகர்கள் என்னதான் வெளியில் எதிரிகள் என்று கூறிக்கொண்டாலும் இன்றுவரை இளையராஜா, எஸ்பிபி மேல் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து பாராட்டி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.