தமிழகம்

மகள்களை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவை எடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. அலறிய மனைவி : வேலூர் அருகே அதிர்ச்சி!

ராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கர் அருகேயுள்ள வேலம் பகுதியை சேர்ந்த தம்பதியர்களான ராஜி(45) இந்திரா(41) இவர்களுக்கு அகல்யா(22) சரண்யா(17) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜி ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வரும் நிலையில் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் கடன் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் ராஜி நேற்று இரவு தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இணைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவை எடுத்துள்ளார்

அப்போது முதலாவதாக வீட்டில் உள்ள அறையில் தனது இரண்டு மகள்களையும் தூக்கில் தொங்க விட்டுவிட்டு வெளியே உள்ள அறையில் ராஜி மற்றும் இந்திரா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர்

மேலும் படிக்க: வகுப்பறையில் கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள்… பதறிய ஆசிரியர் : அரியலூரில் அதிர்ச்சி!!

அப்போது தனது மகள்கள் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்த இந்திரா கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தை சேர்ந்த உறவினர்கள் வந்து பார்த்தபோது அதிர்ச்சடைந்ததோடு உடனடியாக தூக்கில் தொங்கப்பட்டு இருந்த இரண்டு பெண் களையும் மீட்டுள்ளனர்

அப்போது அவர்கள் இருவரும் சுயநினைவை இழந்து மயக்கமாக இருந்ததை கண்ட ராஜி தனது மகள்களின் சாவுக்கு நான்தான் காரணம் என எண்ணி வாலாஜா தண்டலம் பகுதிகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

மேலும் அகல்யா மற்றும் சரண்யா ஆகிய இருவரும் வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் சம்பவங்கள் குறித்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.