தமிழகம்

மகள்களை தூக்கில் தொங்கவிட்டு விபரீத முடிவை எடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. அலறிய மனைவி : வேலூர் அருகே அதிர்ச்சி!

ராணிப்பேட்டைமாவட்டம்,சோளிங்கர் அருகேயுள்ள வேலம் பகுதியை சேர்ந்த தம்பதியர்களான ராஜி(45) இந்திரா(41) இவர்களுக்கு அகல்யா(22) சரண்யா(17) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜி ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வரும் நிலையில் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் கடன் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் ராஜி நேற்று இரவு தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இணைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவை எடுத்துள்ளார்

அப்போது முதலாவதாக வீட்டில் உள்ள அறையில் தனது இரண்டு மகள்களையும் தூக்கில் தொங்க விட்டுவிட்டு வெளியே உள்ள அறையில் ராஜி மற்றும் இந்திரா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர்

மேலும் படிக்க: வகுப்பறையில் கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள்… பதறிய ஆசிரியர் : அரியலூரில் அதிர்ச்சி!!

அப்போது தனது மகள்கள் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்த இந்திரா கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தை சேர்ந்த உறவினர்கள் வந்து பார்த்தபோது அதிர்ச்சடைந்ததோடு உடனடியாக தூக்கில் தொங்கப்பட்டு இருந்த இரண்டு பெண் களையும் மீட்டுள்ளனர்

அப்போது அவர்கள் இருவரும் சுயநினைவை இழந்து மயக்கமாக இருந்ததை கண்ட ராஜி தனது மகள்களின் சாவுக்கு நான்தான் காரணம் என எண்ணி வாலாஜா தண்டலம் பகுதிகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

மேலும் அகல்யா மற்றும் சரண்யா ஆகிய இருவரும் வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் சம்பவங்கள் குறித்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.