மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையை ஒட்டி உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு யானை, கரடி, மான், முயல் உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் பாலாறு வனப்பகுதியில் இருந்து காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி காவிரி ஆற்றுக்கு படையெடுக்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று தண்ணீர் தேடி யானைகள் கூட்டமாக காவிரி ஆற்றுக்கு வந்தது.
யானைக் கூட்டங்கள் தண்ணீர் அருந்திவிட்டு காவிரியை கடந்து மறு கரையில் உள்ள வனப்பகுதிக்கு சென்று விட குட்டி யானை ஒன்று தண்ணீரில் நீந்த முடியாமல் கரையிலேயே நின்று விட்டது.
இதனை கண்ட கர்நாடக வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.குட்டி யானையை வாகனம் மூலம் பாலாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தாய் யானை கூட்டத்துடன் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து வாகனத்தில் இருந்த குட்டி யானையை வனத்துறையினர் இறக்கிவிட்டனர்.
பின்னர் வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து உடனடியாக சென்ற நிலையில் தாய் யானை குட்டி யானை மெதுவாக அழைத்துச் சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்தது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.