வேலூரில் மிகப்பெரிய புத்தகத் திருவிழா.. சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் துரைமுருகன் : பணி நியமன ஆணை!
வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா இன்று சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கியது.
இந்த விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து, புத்தக அரங்குகளை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றார்.
இந்த புத்தகக் கண்காட்சியில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு தலைசிறந்த எழுத்தாளர்களின் கல்வி, பொருளாதாரம் அரசியல், வரலாறு உட்பட பல்வேறு வகையான சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிகழ்வில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து,100 தனியார் நிறுவனங்கள் மூலம் 40 வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.