திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆரணி ஆற்றின் கரையில் சுடுகாட்டை ஒட்டிய முட்புதரில் அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி விமல் என்பவர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் அவருடைய நெருங்கிய நண்பர் சிவா உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் தேடிவந்த நிலையில் சிவா, லட்சுமிகாந்தன், விஜி, விக்கி, பிரவீன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சிவாவின் மனைவியுடன் விமலுக்கு தகாத தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்ககடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை அறிந்த சிவா, விமலை அழைத்துச் சென்று மது போதையில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டி கொலை செய்து சுடுகாட்டில் முட்ப்புதரில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணைக்கு பின்னர் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். கொலை செய்யப்பட்டு உயிரிழந்த விமல் மீது ஏற்கனவே மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2019ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.