கோவை, போத்தனூர் செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்தனர். இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்று பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் கோவை கோண வாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வெங்கடேசன் என்பது தெரியவந்தது. மது போதைக்கு அடிமையான வெங்கடேசன் கடந்த சில நாட்களாக முதுகு வலி இருந்ததாக வீட்டில் கூறி வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கடந்த இரண்டு தினங்களாக அவரை காணவில்லை என அவர் வீட்டில் இருந்தவர்கள் தேடி வந்து உள்ளனர். இந்நிலையில் அவரது உடல் முட்புதரில் இருந்து காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர் கொலை செய்யப்பட்டாரா ? தற்கொலை செய்தாரா ? அல்லது உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்தாரா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
முட்புதரில் 24 வயதுடைய உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.