கோவை ; கோவையில் நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கிக் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மேகலபிரியா. 26 வயதான இவர், கடந்த ஓராண்டாக கோவை காந்திபுரம் கொங்குநாடு மருத்துவமனை அருகே அமைந்துள்ள நியூரோ பெர்க் டயாக்னசிஸ் செண்டரில் பணியாற்றி வந்துள்ளார். ரத்தினபுரி அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.
நேற்று இரவு வழக்கமாக பணிக்கு சென்று இரவு அறைக்கு வந்துள்ளார். இன்று நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் பக்கத்து வீட்டார் கதவை தட்டியபோது திறக்கவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது நிர்வான கோலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து, அவர் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரத்தினபுரி காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவரது பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கோவைக்கு வந்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. காதல் பிரச்சினை காரணமாக பெண் தற்கொலையில் ஈடுபட்டாரா..? அல்லது வேறு ஏதேனும் கொலை சம்பவங்கள் இருந்ததா..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.