வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தாழையாத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னியம்மன் கார்டன் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தேவி (வயது36) என்பவர் வாடகை எடுத்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இவருக்கும் இவரது கணவர் தண்டபாணிக்கு குடும்ப பிரச்சினையில் கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது
இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் அந்த ஆண் பிள்ளைகள் தேவியின் தாய் வீட்டில் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தேவி தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இவரது தாய் மற்றும் மகன்கள் இவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆஃப் ஆகி உள்ள நிலையில் இன்று இவரது வீட்டிற்கு இவர் தாய் வந்து பார்த்தபோது மகள் சடலமாக தூக்கில் தூங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து
உள்ளனர்.
சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவனை பிரிந்து வீட்டில் தனியாக வசித்து வந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.