கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் வாகன நிற்கும் இடத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார்.
அப்பொழுது அங்கு பதுங்கி இருந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி விட்டு அந்த பயிற்சி பெண் மருத்துவர் மீது பாய்ந்து தவறாக நடக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு காவலாளி ஓடி வந்தார். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடினார்.
இது பற்றி சக பயிற்சி மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் தெரிவித்தார். இதற்கிடையில் நள்ளிரவில் ஒரு மணி அளவில் அதே வாலிபர் சிறிய காயத்துடன் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்.
அவரை அடையாளம் கண்டு கொண்ட பயிற்சி மருத்துவர்கள் மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மயான்க் கலார் என்பது தெரிய வந்தது.
மேலும் அவருடன் கோவைக்கு வந்தவர்கள் ரயில் நிலையத்தில் தனியாக விட்டு, விட்டு சென்றதாகவும், இதனால் அவர் அங்கே மூன்று நாட்கள் சுற்றித் திரிந்ததாகவும், தெரிவித்ததாக தெரிகிறது.
சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கும் அந்த வாலிபரை காவல் துறை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.