கோவை : அரசு மருத்துவமனையில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்த ராஜன் (வயது 50) என்பவர் பிளம்பராக உள்ளார். இவரது மூத்த மகன் கவுதம் (வயது 13). ராமநாதபுரம் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி கவுதம் தனது நண்பர்களுடன் ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு கார் ஒர்க்ஷாப் அருகே விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றியது. இதில் அருகே விளையாடிக்கொண்டிருந்த கவுதமின் உடலில் தீ பற்றியது. வலியால் துடித்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒரு மாத சிகிச்சைக்கு பின்பு ஏப்ரல் 25ம் தேதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினான். ஆனால் மீண்டும் சில நாட்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.