கண்ணை மறைத்த காமம்… உடன் பிறந்த தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன் : கர்ப்பமான கொடூர சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 2:31 pm
Sister Raped by Brother - Updatenews360
Quick Share

உடன் பிறந்த தங்கையை அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறாள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த மாணவியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த வேதனையான சம்பவம் நடந்துள்ளது.

தங்கை என்று கூட பார்க்காமல் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானாள். 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே மாணவியை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் உடன் பிறந்த அண்ணனே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது போலீசாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் தாயார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 1005

1

0