Categories: தமிழகம்

4 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்: உடந்தையாக இருந்த மனைவி – பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

திண்டுக்கல்: 4 வயது சிறுமி கொலை வழக்கில் பாலியல் வன்கொடுமையால் சிறுமி உயிரிழந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஒரு கிராமத்தில் 4 வயது சிறுமி, சூடு வைத்து துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, சிறுமியை கொலை செய்ததாக அந்த கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 31), அவரது மனைவி கீர்த்திகா (23) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கீர்த்திகா அந்த சிறுமியை திருப்பூரை சேர்ந்த பெற்றோரிடம் இருந்து தனது வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும், சிறுமி அடிக்கடி சேட்டை செய்ததால் சூடு வைத்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்ததாகவும் அந்த தம்பதி தெரிவித்தனர்.

பின்னர் அந்த சிறுமியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பிடிபட்ட தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியானது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜேஷ்குமாரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், ராஜேஷ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததையும், அதற்கு அவரது மனைவி கீர்த்திகா உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றம் செய்து ராஜேஷ்குமார், கீர்த்திகா ஆகிய 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Poorni

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

28 minutes ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 hour ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

3 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

3 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

4 hours ago

This website uses cookies.