Categories: தமிழகம்

தாயுடன் தகாத தொடர்பு… மகளுடன் காதல் : ஒரே வீட்டில் உல்லாசம் அனுபவித்த இளைஞர் : தட்டிக் கேட்ட மீனவரை கொலை செய்து எரித்த கொடூரம்!!

ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மீன் வியாபாரி கொலை செய்த சம்பவம் குறித்து மனைவி, மகள் மற்றும் மகளின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஞானசேகர் (வயது 42). இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சலைத்ராணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது வீடு அருகில் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்ற கார்த்திக் (வயது 24) என்பவர் மரப்பட்டறை வைத்துள்ளார். இதில் சலைத்ராணிக்கும், கார்த்திக்கும் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஞானசேகரின் 16வயது மூத்த மகள் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ஞானசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் அச்சங்குளம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் மற்றும் பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தது மீன் வியாபாரி ஞானசேகர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில் ஞானசேகரை கொலை செய்ய அவரது மனைவி, மகள் மற்றும் மகளின் காதலன் கார்த்திக் மூன்று பேரும் திட்டம் போட்டுள்ளனர்.

நேற்று இரவு ஞானசேகர் தூங்கியதும். அவரது மகள் தனது காதலன் கார்த்திக்கு தந்தை உறங்கி விட்டார் வீட்டுக்கு வரும்படி மெசேஜ் அனுப்பி உள்ளார். இதையடுத்து கார்த்திக்கும் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ஞானசேகரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். அவர் உயிரிழந்தது தெரிந்ததும் சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு அச்சங்குளம் காட்டுப் பகுதியில் போட்டு பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கார்த்திக் என்ற கருப்பசாமி, சலைத்ராணி மற்றும் அவரது மகள் ஆகிய மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவரை மனைவி மற்றும் மகள், மகளின் காதலன் சேர்ந்து அடித்து கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

18 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

19 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

19 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

19 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

20 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

21 hours ago

This website uses cookies.