கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் மது போதையில் கன்னியாகுமாரியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சாலை ஓரத்தில் இருந்த சிறு வியாபாரிகள் , சுற்றுலா பயணிகள் மற்றும் கடைகள் மீது வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இந்த நிலையில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.
மேலும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கூடும் முக்கிய பகுதியாக நட்சத்திர ஏரி இருந்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் அதிவேகமாக மது போதையில் ஏரி சாலைக்குள் சென்றுள்ளார் .
அப்போது நிலை தடுமாறி வாகனம் சுற்றுலாப் பயணிகளின் நடை பாதை அருகே உள்ள வியாபாரிகள், கடைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .
மது போதையில் இருந்த சுரேஷ் என்பவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பிடித்து கொடைக்கானல் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.